அலாரம் வைத்து காத்திருக்கும் நடிகை! பப்ளிசிட்டிக்கு இப்படியெல்லாமா பண்ணுவாங்க!

 

அலாரம் வைத்து காத்திருக்கும் நடிகை! பப்ளிசிட்டிக்கு இப்படியெல்லாமா பண்ணுவாங்க!

சமூக வலைத்தளங்களில் நடிகைகளையும், ஹீரோக்களையும் ரசிகர்கள் பாலோ பண்ண ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் தமிழ் சினிமா நடிகைகள் செய்கிற சேட்டைகளுக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. அரை குறை ஆடைகளிலும், ‘ஆடை’களே தெரியாத அளவிற்கும் விதவிதமாக போட்டோஷூட் செய்து தங்களது வலைத்தள பக்கங்களில் பதிவேற்றுவது, பட ரிலீஸ் சமயத்தில் படத்தின் பப்ளிசிட்டிக்காக குண்டக்க மண்டக்க என்று எதையாவது ட்வீட் செய்வது

சமூக வலைத்தளங்களில் நடிகைகளையும், ஹீரோக்களையும் ரசிகர்கள் பாலோ பண்ண ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் தமிழ் சினிமா நடிகைகள் செய்கிற சேட்டைகளுக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. அரை குறை ஆடைகளிலும், ‘ஆடை’களே தெரியாத அளவிற்கும் விதவிதமாக போட்டோஷூட் செய்து தங்களது வலைத்தள பக்கங்களில் பதிவேற்றுவது, பட ரிலீஸ் சமயத்தில் படத்தின் பப்ளிசிட்டிக்காக குண்டக்க மண்டக்க என்று எதையாவது ட்வீட் செய்வது, அப்படியும் பரபரப்பு கிளம்பவில்லை என்றால், யார் மீதாவது செக்ஸ் புகார் சொல்வது… அதுவும் வேலைக்காகலைன்னா சமூக பிரச்சனைகளைக் கையில் எடுத்து, அதைப் பற்றி ட்வீட் போடுவது என்று கிளம்பி விடுவார்கள்.

kalyani priyadharshan

இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வரும் ‘ஹீரோ’  படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது. டீஸர் வெளியாகும் நேரத்திற்காக பிற்பகல் 11 மணிக்கு அலாரம் வைத்து காத்திருப்பதாக படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். கல்யாணியின் ட்வீட்டிற்கு இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ‘இத நானே எதிர்பார்க்கலயே’ என்று கமென்ட் செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்த கல்யாணி, ‘என்னதான் டீசர் பார்த்துட்டாலும் அந்த லிங்க்கை கிளிக் பண்ணி எல்லோருடனும் பார்க்குறதுல ஒரு தனி எக்ஸைட்மென்ட்’ என்று பதிலளித்துள்ளார். 

இப்படியெல்லாம் எதிர்பார்ப்பு இருப்பதாக ட்விட்டரில் போட்டு எதையாவது கிளப்பினால் படம் நன்றாக ஓடிவிடும் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல… நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்தால் படம் ஓடும் என்று யாராவது கல்யாணிக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க” என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்!