அறிகுறியே இல்லாமல் 19 நாட்களுக்கு பின் கேரள மாணவிக்கு கொரோனா…அச்சத்தில் மருத்துவர்கள்!

 

அறிகுறியே இல்லாமல் 19 நாட்களுக்கு பின் கேரள மாணவிக்கு கொரோனா…அச்சத்தில் மருத்துவர்கள்!

கேரளாவில் டெல்லி சென்றுவிட்டு வீடு திரும்பிய கேரளா மாணவிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். 

 

இந்நிலையில் கேரளாவில் டெல்லி சென்றுவிட்டு வீடு திரும்பிய கேரளா மாணவிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.19 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகவில்லை. தற்போது நடத்தப்பட்ட இறுதிக்கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முன்னதாக 14 நாட்கள் ஒருவரை தனிமைப்படுத்தினால் கொரோனா இருப்பது உறுதியாகிவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அறிகுறியே இல்லாமல் கொரோனா இருப்பது அதன் கொடூரத்தையே காட்டுகிறது.