அருவருப்பாக பேசும் பாஜக அமைச்சர்கள் -புலம்பும் பெண் பிரமுர்கள் -பிரதமரிடம் புகார் 

 

அருவருப்பாக பேசும் பாஜக அமைச்சர்கள் -புலம்பும் பெண் பிரமுர்கள் -பிரதமரிடம் புகார் 

டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அங்கு பல கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை தாக்கியும் ,தங்கள் கட்சிகளை தூக்கியும் பேசி வருகின்றனர் .தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் .

டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அங்கு பல கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை தாக்கியும் ,தங்கள் கட்சிகளை தூக்கியும் பேசி வருகின்றனர் .தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் .

bjp

இந்நிலையில் பாஜக அமைச்சர்கள் ,மற்றும் மாநில முதல்வர்களின் பிரச்சார பேச்சுக்கள் மிகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் ,வெறுப்பாகவும் ,அருவருப்பாகவும் இருப்பதாக டெல்லியிலுள்ள 170 க்கும் மேற்பட்ட பெண் பிரமுகர்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர் .

varma

அதில் குறிப்பாக பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா ,அனுராக் தாகூர் ,உ .பி ,முதல்வர் யோகி ,பிஜேபி எம் .பி .பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது பலமாக குற்றசாட்டுகளை கூறியுள்ளனர் .குற்றச்சாட்டு கூறியவர்களில் பொருளாதார நிபுணர் தேவகி ஜெயின் ,முன்னாள் வெளிநாட்டு தூதர்கள் மதுபாதுரி ,நவரெஹா சர்மா ,சோயாஹாசன் ,உமா சக்ரவர்த்தி ,முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் சைதா ஹமீது உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் .

devaki

அதில் அவர்கள்  ,”பிரதமர் பாஜக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் ,நீங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் பொதுவானவர் .குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களை உங்கள் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்கள் துரோகிகள் ,தீவிரவாதிகள் என்று பேசி வருகிறர்கள் .அவர்கள் அமைதியான முறையில் தான் போராடி வருகிறார்கள்  .அதனால் அப்படி பேசுவதை நிறுத்துமாறு நீங்கள் அவர்களுக்கு ஆணையிட வேண்டுகிறோம் “என்று குறிப்பிட்டுள்ளனர் .