அரும்பாக்கத்தில் இளைஞருக்கு கொரோனா உறுதி – 12 பேருக்கு கொரோனா சோதனை

 

அரும்பாக்கத்தில் இளைஞருக்கு கொரோனா உறுதி – 12 பேருக்கு கொரோனா சோதனை

அரும்பாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி ஆனதை தொடர்ந்து, 12 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை: அரும்பாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி ஆனதை தொடர்ந்து, 12 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 15 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுக்க மக்கள் கொரோனா பீதியில் காணப்படுகின்றனர். டீக்கடை முதல் பிரபலங்கள் வரை கொரோனா வைரஸ் பற்றி தான் பேச்சு.

ttn

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பி ஒரு இளைஞர் அரும்பாக்கத்தில் உள்ள தனது அறையில் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அரும்பாக்கம் பகுதியில் அவருடன் தங்கிருந்த 8 பேர் உட்பட 12 பேர் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.