அருகிவரும் பறவை இணத்தை வேட்டையாட அனுமதிக்கும் பாகிஸ்தான், யாருக்குத் தெரியுமா?

 

அருகிவரும் பறவை இணத்தை வேட்டையாட அனுமதிக்கும் பாகிஸ்தான், யாருக்குத் தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டின் பலூச்சி,சிந்து,பஞ்சாப் பகுதிகள் மலைப்பாங்கானவை. இந்தப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடத் தடை விதித்து இருக்கிறது அரசு.குறிப்பாக ஹவ்பாரா பஸ்தார்த் ( Houbara bustard ) எனப்படும் அருகிவரும் பறவை இனத்தை வேட்டையாடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

பாகிஸ்தான் நாட்டின் பலூச்சி,சிந்து,பஞ்சாப் பகுதிகள் மலைப்பாங்கானவை. இந்தப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடத் தடை விதித்து இருக்கிறது அரசு.குறிப்பாக ஹவ்பாரா பஸ்தார்த் ( Houbara bustard ) எனப்படும் அருகிவரும் பறவை இனத்தை வேட்டையாடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

ameer

ஆனால்,பாகிஸ்தான் அரசு இந்த பறவைகளை வேட்டையாடி உண்ண வளைகுடா அரச குடும்பங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி தருகிறது.அதற்கு காரணம் அந்த பறவைக்கறியின் சுவையில் கல்ஃப் அரசர்களுக்கு உள்ள மயக்கமும்,அதை தனக்கு அரசியல் மற்றும் பொருளாதார லாபமாக்கிக் கொள்ள விரும்பும் பாகிஸ்தானின் கணக்கும்.

qatar

சமீபத்தில் கத்தார் அரசர் அமீர் ஷேக் தமீம் உட்பட அவரது குழுவைச் சேர்ந்த 9 பேருக்கு ஹவ்பாரா பறவைகளை வேட்டையாட அனுமதி அளித்திருக்கிறது.
இதற்கிடையே , நவம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி  31-ம் தேதிவரை ஹவ்பாரா பறவைகளை வேட்டையாடிக் கொள்ளும் அனுமதி பஹ்ரைன் அரசர் ஷேக் அஹந்து பின் இசா பின் சல்மான் அல் கலீபா,அவரது உறவினரான ஷேக் இம்ராஹிம் உட்பட 5 பேருக்கு வேட்டையாட அரசு அனுமதி அளித்திருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. 

pakistan

பஹ்ரைன் அரசருக்கு சிந்து மாநிலத்தில் உள்ள ஜம்ஷோரா மாவட்டத்திலும், அவரது உறவினரான ஷேக் இம்ராஹிமுக்கு கஜாவால் மாவட்டமும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும்,அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே வேட்டையாடுவார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தரப்பு தெரிவித்து இருக்கிறது.