அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

 

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம் 12 செமீ, கூடலூர், ஸ்ரீவைகுண்டம் 8 செமீ, பாளையங்கோட்டை தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. கேரள கடற்பகுதி, லட்ச தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.