அரசு விடுமுறை பட்டியலில் இருந்து உழைப்பாளர் தினம் நீக்கம்: வலுக்கும் கண்டனம்!

 

அரசு விடுமுறை பட்டியலில் இருந்து உழைப்பாளர் தினம் நீக்கம்: வலுக்கும் கண்டனம்!

உழைப்பாளர் தினத்தை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில அரசுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சென்னை: உழைப்பாளர் தினத்தை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில அரசுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உழைப்பாளர் தினம் அரசு விடுமுறையாக உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்ட திரிபுரா மாநில அரசு, உழைப்பாளர் தினத்தை பட்டியலில் இருந்து நீக்கியது. அதற்குப் பதிலாக அந்த நாளை வரையறுக்கப்பட்ட விடுமுறையாகக் குறிப்பிடப்பட்டது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சங்கர் பிரசாத் தத்தா, “மே தினம் என்பது எந்த அரசியலையும் சாராதது. உலகம் முழுவதும் அன்றைய நாள் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாநில அரசின் இந்தச் செயல் உழைக்கும் மக்களை அவமதிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.