அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம்

 

அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம்

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

புதுச்சேரி: எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இலக்கிய உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளர் பிரபஞ்சன். சாகித்ய அகாதமி வென்ற பிரபஞ்சன் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 20-ம் தேதி புதுச்சேரியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. 

அவரது மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. மேலும் எழுத்தாளர்கள், அரசியல் தலவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பிரபஞ்சனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என இலக்கிய அமைப்பினர் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.