அரசு பேருந்தின் மீது மோதிய தனியார் கல்லூரி பேருந்து.. 30 பேர் படுகாயம்..!

 

அரசு பேருந்தின் மீது மோதிய தனியார் கல்லூரி  பேருந்து.. 30 பேர் படுகாயம்..!

அயோத்தி பட்டிணம் அருகே, வலப்புறமாக திரும்ப முற்பட்ட போது எதிரே வேகமாக வந்த ராமலிங்க புரத்தில் உள்ள  தனியார் கல்லூரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் பேருந்து… அயோத்தி பட்டிணம் அருகே, வலப்புறமாக திரும்ப முற்பட்ட போது எதிரே வேகமாக வந்த ராமலிங்க புரத்தில் உள்ள  தனியார் கல்லூரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

Accident

இந்த விபத்தில், அரசு பேருந்திலிருந்த 50 பேருக்கும், தனியார் கல்லூரி பேருந்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு பேருந்திலும் முன்னால் அமர்த்திருந்த 30 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. காயப்பட்ட அனைவர்களும் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். 

Accident

வழக்கமாக, அரசுப் பேருந்து அயோத்தி பட்டிணம் அருகே வந்து தான் திரும்பும்  எனக் கூறப் படுகிறது. ஆனால், திடீரென கல்லூரி பேருந்து எதிரே வந்ததால் இரு பேருந்துகளின் வேகத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் இச்சம்பவம் நடந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Accident