அரசு பேருந்தின் அடியில் சிக்கி பலியான மூவர்: சிகிச்சைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

 

அரசு பேருந்தின் அடியில் சிக்கி பலியான மூவர்: சிகிச்சைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

அரசு பேருந்தில் கார் ஒன்று மோதிய விபத்தில் பெண் உள்பட மூவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் : அரசு பேருந்தில் கார் ஒன்று மோதிய விபத்தில் பெண் உள்பட மூவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே அரசு பேருந்து ஒன்று  நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது பெங்களூருவிலிருந்து நாகர்கோவில்  சென்று கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் பேருந்தை ஓட்டுநர் எடுக்கும் வேளையில், கார் ஒன்று பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. 

bus

இந்த விபத்தில்  பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்த ராஜவேல் முருகன், கமலம், சுப்பிரமணியன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும்  கார் ஓட்டுநர் ஐயப்பன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் கார் சிக்கி கொண்டதால்  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி காரை அப்புறப்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். 

car

இதுகுறித்து நடத்திய விசாரணையில், சிகிச்சைக்காகக் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மூவரும் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதிவேகமாகக் கரை ஓட்டி  வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.