அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி! 15 பயணிகள் படுகாயம்!
Nov 20, 2019, 09:40 IST1574223014000
நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகே உள்ள செங்கட்டாம்பட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று அரசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தவர்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.