அரசு பள்ளிகளில் ஆதார் கட்டாயம், அரசு உத்தரவு!

 

அரசு பள்ளிகளில் ஆதார் கட்டாயம், அரசு உத்தரவு!

ஆதார் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆதார் கட்டாயம், அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் அவரின் பெற்றோர் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

ஆதார் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆதார் பதிவதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.