அரசு நிலைகுலைந்து கிடப்பதற்கு சாட்சி இதுதான்… ஸ்டாலின் அதிரடி

 

அரசு நிலைகுலைந்து கிடப்பதற்கு சாட்சி இதுதான்… ஸ்டாலின் அதிரடி

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து கிடப்பதற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரமே சாட்சி என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து கிடப்பதற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரமே சாட்சி என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக மக்களுமே அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கூறுகையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி. அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றப்பட்ட அனைவரையும் சோதித்ததாக தெரியவில்லை என்றார்.