அரசு சொகுசு பேருந்துகளில் கட்டண குறைப்பு.. முதற்கட்டமாக விழுப்புரத்தில் அமல்!

 

அரசு சொகுசு பேருந்துகளில் கட்டண குறைப்பு.. முதற்கட்டமாக விழுப்புரத்தில் அமல்!

மக்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதன் வசதி காரணமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட 1,000 புதிய பேருந்துகள் இயக்கபட்டுளதாக கூறப்படுகிறது. மக்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதன் வசதி காரணமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏழை, எளிய மக்கள் இதில் பயணம் செய்ய முடியாத சூழலும் நிலவுகிறது. இதனால் பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைக் கருத்தில் கொண்ட அரசு, முதற்கட்டமாக விழுப்புரத்தில் சொகுசு பேருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது.

ttn

அதன் படி,  2+2 இருக்கைகள் கொண்ட பேருந்தின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.15 ரூபாயாகவும், . 2+3 இருக்கைகள் கொண்ட பேருந்தின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது விழுப்புரத்தில் உள்ள 700 சொகுசு பேருந்துகளில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், நகர மற்றும் மாநகர பேருந்துகளில் இந்த கட்டண குறைப்பு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.