அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது ஏற்புடையது இல்லை! – டி.டி.வி.தினகரன் கண்டனம்

 

அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது ஏற்புடையது இல்லை! – டி.டி.வி.தினகரன் கண்டனம்

கொரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைப்பது ஏற்புடையது இல்லை என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைப்பது ஏற்புடையது இல்லை என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. 

இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்காக இந்தப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவினங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.