அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!
Oct 18, 2019, 09:26 IST1571371011000
தமிழக அரசும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5% உயர்த்தியுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 9 ஆம் தேதி. மத்திய அரசு ஊழியர்களின் 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படியின் சதவீதத்தை 5% அதிகரித்து 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழக அரசும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5% உயர்த்தியுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதம் ஆக இருந்து வந்த நிலையில், அதனுடன் 5% சேர்த்து 17% சதவீதமாக வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவித்துள்ளது.