அரசுப் பள்ளியை லாட்ஜ் போல் மாற்றிய தலைமை ஆசிரியர்: அடித்து உதைத்த பொதுமக்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

அரசுப் பள்ளியை லாட்ஜ் போல் மாற்றிய தலைமை ஆசிரியர்: அடித்து உதைத்த பொதுமக்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் : தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் சுதாகரனும், அவரது நண்பரும் ஆசிரியருமான சுப்பையாவும் இளம் பெண் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே உல்லாசமாக இருக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் கடந்த 10ஆம் தேதி சனிக்கிழமை பள்ளியில் வகுப்புகள் நடத்துவதாக கணக்கு காண்பித்து விட்டு சுதாகரனும், சுப்பையாவும் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பெண் ஒருவர் பள்ளி சீருடை அணிந்த மகனுடன் பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் அறைக்கு அப்பெண் சென்றதும் அறை பூட்டப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அழ தொடங்கியுள்ளான். அவனை சமாதானம் செய்த ஆசிரியர் சுப்பையா அவனைக் கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி தந்துள்ளார். ஆனால் சிறுவன் சாலையிலேயே அம்மாவை அறையில் வைத்து பூட்டி விட்டார்கள் என்று கத்தி அழ தொடங்கியதால் அப்பகுதி மக்கள் விசாரித்துள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் சுதாகர் பள்ளியில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆசிரியர் சுப்பையா, சுதாகரனை பிடித்து அடித்தனர்.  இதைத் தொடர்ந்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் சுதாகரனை கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களைச் சமூகத்தில் நல்ல குடிமகனாக மாற்ற  வேண்டிய பெரிய பொறுப்பு ஆசிரியர்கள் வசம் இருக்கும் நிலையில் இது போன்ற சிலரின் ஒழுக்கக்கேடான செயல்கள் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர் சமூகத்திற்கும்  அவப்பெயரை ஈட்டிக் கொடுக்கும் என்பதே கசப்பான உண்மை.