அரசுப்பள்ளியில் சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

 

அரசுப்பள்ளியில் சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன் முதலாக சானிடரி நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன் முதலாக சானிடரி நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பெண்கள் பயிலும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தார். 

அதன்படி முதுகுளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக சுகாதாரத்துறை இலவசமாக சானிடரி நாப்கினை வழங்கியது. மேலும் அந்த இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.