அரசியலை வியாபாரம் ஆக்காதீர்கள்… விஜய் அப்பா எஸ்.ஏ.சி பேச்சு

 

அரசியலை வியாபாரம் ஆக்காதீர்கள்… விஜய் அப்பா எஸ்.ஏ.சி பேச்சு

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசியலை வியாபாரம் ஆக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநரமான எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ் செய்துள்ளார்

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசியலை வியாபாரம் ஆக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநரமான எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ் செய்துள்ளார்.

sac

காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர்மன்ற அலுவலகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திறந்துவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்துவிடலாம் என்ற எண்ணம் தற்போது மாறிக்கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசியலை வியாபாரம் ஆக்காதீர்கள். இனி மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் இனிமேல் வெற்றியடைய முடியும்

sac

. கடந்த நான்கு, ஐந்து வருடமாகத் திரைப்படத் துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.