அய்யோ பாவம் டி.டி.வி.தினகரன்… குனியக்குனிய கொட்டும் எடப்பாடி..!

 

அய்யோ பாவம் டி.டி.வி.தினகரன்… குனியக்குனிய கொட்டும் எடப்பாடி..!

எம்ஜிஆர் சிலைக்கு மாலைப்போட்டது குற்றமா? அவர் எல்லோருக்குமான தலைவர். இலைக்குள் சுருட்டி மடித்து விடாதீர்கள் என்று அமமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்து விட்டார். ஆனால் பொதுச் சின்னம் கிடைக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு வரை நெல்லையில் அமமுகவின் கை ஓங்கியிருந்தது. தேர்தலுக்கு பின் அமமுக கட்சியினர் பலர் அதிமுகவுக்கு நடையை கட்டி விட நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. 

edappadi palanisamy

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் தற்போதுஅமமுகவை நெல்லை அதிமுகவினர் தலைகாட்ட விடுவதில்லை. குறிப்பாக அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த உற்சாகத்தில் கட்சி நிர்வாகிகள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதையும் பொறுத்துக் கொள்ளாத அதிமுக தரப்பு, நாங்கள் அமைத்த சிலை எங்களுக்கு தான் சொந்தம், மாற்று கட்சியினருக்கு சொந்தமில்லை.

அமமுக தரப்பு மாலை அணிவித்ததோடு சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை போலீசில் புகாரும் செய்து விட்டனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலைப்போட்டது குற்றமா? அவர் எல்லோருக்குமான தலைவர். இலைக்குள் சுருட்டி மடித்து விடாதீர்கள் என்று அமமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.