அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நாளை ஏடு வாசிப்பு திருவிழா தொடங்குகிறது 

 

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நாளை ஏடு வாசிப்பு திருவிழா தொடங்குகிறது 

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வா சிப்பு திருவிழா நாளை தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார்அய்யா வைகுண்டசாமி அவர்கள்.பல்வேறு சமயம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு எடுத்து சென்று மாபெரும் சீர்திருத்ததினை மக்கள் இடையே விட்டு சென்றவர் அய்யா வைகுண்ட சாமி ஆவார்.

ayya

இத்தகைய பெருமைகள் வாய்ந்த அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சாமிதோப்பில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, மாலை 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏடு வாசிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனியும்அதனையடுத்து  அன்னதானமும் நடைபெறுகிறது.

ayya2

விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானமும் நடைபெறுகிறது.

விழாவின்15-ம் நாளான டிசம்பர் 14-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்வும் அதனையடுத்து திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி ஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.