அயோத்தி வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா?

 

அயோத்தி வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா?

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், அயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதையைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள். 
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1527ம் ஆண்டு முகலாய படைத் தலைவர் மீர் பாகி தான் பாபர் மசூதியைக் கட்டினார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு  ஆர்.எஸ்.எஸ். – வி.ஹெச்.பி தொண்டர்களால் அந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் மதக்கலவரம் வெடித்து கலவரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியானார்கள். 

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், அயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதையைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள். 
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1527ம் ஆண்டு முகலாய படைத் தலைவர் மீர் பாகி தான் பாபர் மசூதியைக் கட்டினார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு  ஆர்.எஸ்.எஸ். – வி.ஹெச்.பி தொண்டர்களால் அந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் மதக்கலவரம் வெடித்து கலவரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியானார்கள். 

 

case

1993ம் ஆண்டு இந்த வழக்கில் அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.  2002ம் ஆண்டு பாபர் மசூதி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது. 2010ல் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் 2011ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

case

கடந்த 2016ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ராமர் கோயிலை கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  2017ம் ஆண்டு சம்பந்தப்பட்ட இரு பிரிவினரும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் கூறினார். பின்னர், கடந்த ஆண்டு சுப்பிரமணியன் சுவாமியின் மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வருடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கிற்காக தனியே நியமிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு மே மாதம் மத்தியஸ்த குழு இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்பான தினசரி விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்.

case

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை முன்னிட்டு  டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அக்டோபர் 14ந்தேதி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.  பாபர் மசூதி வழக்கில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை அக்டோபர் 16ந்தேதி முடிவுக்கு வந்தது. விரைவில் தன் பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்குகிறார் நீதிபதி ரஞ்சன் கோகாய்.