அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

 

அயோத்தி வழக்கு:  மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர்  ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த  2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

ayodhya

இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.இந்த பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் எழுப்பியது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்த்துத் தெரிவித்த நிலையில் முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.

ayodhya tnn

இந்நிலையில், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில பிரச்னையில் சமரச பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்ல குழு அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமை வகிக்க, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் பஞ்சு ஸ்ரீராம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தக் குழு 8 வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை சமர்பிக்க வேண்டும்.அதே சமயம் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. குறிப்பாக இந்த குழுவில் இடம்பெற்ற மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.