அயோத்தி இராமர் கோயில்!  முஸ்லிம் அமைப்பு இன்று முக்கிய முடிவு!

 

அயோத்தி இராமர் கோயில்!  முஸ்லிம் அமைப்பு இன்று முக்கிய முடிவு!

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக பலவருடங்களுக்கு நீடித்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு அளித்திருந்தது. மேலும் தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவும் உத்தரவிட்டிருந்தது. 

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக பலவருடங்களுக்கு நீடித்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு அளித்திருந்தது. மேலும் தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவும் உத்தரவிட்டிருந்தது. 

ayodhya

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்வது பற்றி ஜாமியத் உலமா இ இந்த் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் இன்று அதன் செயற்குழு கூட்டத்தில் கூடி முடிவு எடுக்க இருக்கிறது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷாத் மதானி கூறுகையில், “எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என விரும்பி இருந்தால், நாங்கள் 70 ஆண்டு காலங்களாக இந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்திருக்க மாட்டோம். நிச்சயமாக இந்த வழக்கை நாங்கள் 5 ஏக்கர் நிலத்துக்காக தொடரவில்லை. எங்களது உரிமைக்காகத் தான் வழக்கை நடத்தினோம். முஸ்லீம்களிடம் போதுமான அளவிற்கு நிலம் உள்ளது. எங்கள் நிலத்தில் தான் மசூதிகள் கட்டி இருக்கிறோம். இனியும் அப்படியே செய்வோம் என்று குறிப்பிட்டார்.