அயோத்தி இடம் இந்துகளுக்கே சொந்தம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 

அயோத்தி இடம் இந்துகளுக்கே  சொந்தம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

நாடே எதிர்நோக்கி காத்திருந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. 

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அதாவது கடந்த  2010ஆம் ஆண்டு  அலகாபாத் உயர்நீதிமன்றம்,    அயோத்தியில்  உள்ள இடத்தை  ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ayodhya

இதை எதிர்த்து மூன்று பிரிவினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின்  கடைசிக்கட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

ayothi

இந்நிலையில்  5 நீதிபதிகளும் ஒரு மனதாக ஷியா  வக்ஃபு வாரிய  மனுக்கள் மற்றும் நிர்மோஹி அக்காரா  ஆகியோரின் மனுக்களையும்  தள்ளுபடி செய்தனர். அதேபோல் நிர்மோஹி அக்காரா மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதை  தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அறிவித்த நீதிமன்றம் அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.