அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி!

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்டமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ayodhya

இந்நிலையில்  5 நீதிபதிகளும் ஒரு மனதாக ஷியா  வக்ஃபு வாரிய  மனுக்கள் மற்றும் நிர்மோஹி அக்காரா  ஆகியோரின் மனுக்களையும்  தள்ளுபடி செய்தனர். அதேபோல் நிர்மோஹி அக்காரா மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதை  தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிமன்றம் ம் அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ram

மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் கோவில் கட்டுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று  கூறியுள்ளது.இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.