அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

 

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

லக்னோ: அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமஜென்ம பூமிக்குச் சென்றார். அங்குள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் யோகி பங்கேற்றார்.

அதன்பின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது, இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெறும்.

மக்களின் நம்பிக்கையை உபி அரசு மதிக்கிறது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு விரைவில் சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த சிலை, 50 மீட்டர் உயர மேடையில், சுமார் 150 மீட்டர் உயரத்தில் இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.