அயோக்யா வெளியாகாதது அயோக்கியத்தனம்! நடிகர் பார்த்திபன் கடும் தாக்கு! 

 

அயோக்யா வெளியாகாதது அயோக்கியத்தனம்! நடிகர் பார்த்திபன் கடும் தாக்கு! 

அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயோக்யா.முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.  இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் முதல் காட்சியை காண ரசிகர்கள் திரையரங்குகளில் முன் பேனர், கட் அவுட் போன்றவற்றை தயார் செய்து காத்துக்கொண்டு இருந்தனர். 

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக  அயோக்யா படம் வெளியாவது தள்ளி போடப்பட்டுள்ளதாக பி.ஆர்.ஓ ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

vishal

நடிகர் விஷால் அயோக்யா  ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன், ஆனால் முடியவில்லை எனக்கென ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

As I wait. For my hardwork called #ayogya to release. I did my best.more than an https://t.co/nThd9d438M always. I groomed my child since it came on my lap.BUT.not enuf??? #gajjnimohamed. My time will come. I continue my journey Gb pic.twitter.com/yjKHQitJ7O

— Vishal (@VishalKOfficial) May 9, 2019

அயோக்யா  திரைப்படம் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் முன்பதிவு செய்யப்பட்ட பணம், அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் எனத் திரையரங்கு தரப்பில் தெரிவித்துள்ளனர்

வெளியீடு கடைசி நிமிட
இடையூறுகளால் தள்ளிவிடப்படுவது,
‘அயோக்கிய’த்தனம்!
தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளச்சலுக்கு
அளவே இருக்காது!
வெல்வர் விரைவில்

— R.Parthiban (@rparthiepan) May 10, 2019

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், ‘கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளிவிடப்படுவது அயோக்கியத்தனம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளைச்சலுக்கு அளவே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.