அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி…விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!

 

அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி…விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!

மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகறாரில் சந்திரலேகா கோபித்துக் கொண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள  தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பையர்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன். சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் இவருக்கு சந்திரலேகா என்ற மனைவியும்  4 மகள்களும் உள்ளனர். 

ttn

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நீலகண்டன் பணிக்கு செல்லாமல் 4 மாதமாக  வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகறாரில் சந்திரலேகா கோபித்துக் கொண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள  தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

ttn

இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால்  மனமுடைந்த நீலகண்டன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட  நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் நீலகண்டனின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.