அம்மா, பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு! அசத்தும் மாவட்ட ஆட்சியர்

 

அம்மா, பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு! அசத்தும் மாவட்ட ஆட்சியர்

அம்மா மற்றும் பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பினால் சிறப்பு பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அம்மா மற்றும் பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பினால் சிறப்பு பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஜனவரி 24-ஆம் தேதியன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண் குழந்தைகளை மகிழ்விக்கவும்,  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

selfie

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெண் குழந்தைகள் தங்களது அம்மா மற்றும் பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படங்களை போட்டியாளர்கள் ‘பேட்டி பச்சாவோ பேட்டி பத்தாவோ’ என்ற முகநூல் பக்கத்திற்கோ அல்லது 7397285643 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்பலாம். இவ்வாறு புகைப்படங்களை அனுப்புவதற்கு வரும் 13-ஆம் தேதியே கடைசி தேதி” என குறிப்பிடப்பட்டுள்ளது.