அம்மா உணவகத்தை விட குறைந்த விலையில் சாப்பாடு: நடிகை ரோஜா அசத்தல்

 

அம்மா உணவகத்தை விட குறைந்த விலையில் சாப்பாடு: நடிகை ரோஜா அசத்தல்

தமிழகத்தின் ‘அம்மா’ உணவகத்தை போல் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் ஹோட்டல் ஒன்றை நடிகை ரோஜா துவங்கியுள்ளார்.

ஆந்திரா: தமிழகத்தின் ‘அம்மா’ உணவகத்தை போல் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் ஹோட்டல் ஒன்றை நடிகை ரோஜா துவங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகை ரோஜா, தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக உள்ள ரோஜா, தனது நகரி தொகுதியில் புதிய ஹோட்டல் ஒன்றை திறந்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடங்கியுள்ள இந்த ஹோட்டலில் ‘அம்மா’ உணவகத்தை காட்டிலும் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் ‘அம்மா’ உணவகத்தை முன் மாதிரியாக வைத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா கேண்டீன்’, கர்நாடகாவில் ’இந்திரா கேண்டீன்’ ஆகியவற்றில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இவற்றை விட குறைவான விலையில் ரோஜாவின் ஹோட்டலில் உணவு வழங்கப்படுகிறது.

வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களின் பசியை தீர்க்கும் விதமாக நகரி தொகுதியில் சொந்த செலவில் இந்த ஹோட்டலை ரோஜா திறந்து வைத்துள்ளார். ரோஜாவின் இந்த செயலை பாராட்டிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தாலிவர் ஜெகமோகன் ரெட்டி, பிற தொகுதி எம்.எல்.ஏக்களும் இதுபோன்று உணவகம் தொடங்குமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் வரும் 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்ல் நடைபெறவுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு போட்டியாக ஓட்டுகளை கவர ரோஜா இந்த ஹோட்டலை திறந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.