அம்மாவும் 40 திருடர்களும்! அதிமுகவை விளாசிய சீமான்!!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.
அதன்பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர். என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளனர். தமிழக அமைச்சர்கள் குறித்து விமர்சித்து வரும் சீமான், தற்போது அவர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக விக்கிரவாண்டியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து சர்ச்சையாக பேசியதற்காக, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்ககூடியதாக பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் போன்ற வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன.