அம்மாவுடன் குளத்துக்கு சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 

அம்மாவுடன் குளத்துக்கு சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

9 வயதான இந்த இரட்டை சகோதரிகள் 4 ஆம் வகுப்பு படித்து வந்தனர். 

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூர் சங்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி வீரமலை-கண்ணம்மாள். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ராமுப்ரியா, லட்சுமிப்ரியா என்னும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. 9 வயதான இந்த இரட்டை சகோதரிகள் 4 ஆம் வகுப்பு படித்து வந்தனர். 

ttn

இந்நிலையில் நேற்று பிற்பகலில் அவர்கள் இரண்டு பேரும் தாயாருடன் வீட்டின் பக்கத்தில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். கண்ணம்மாள் துணி துவைத்துக் கொண்டிருக்க, சிறுமிகள் இரண்டு பேரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள் சத்தம் போட்டு குழந்தைகளை காப்பாற்றுமாறு கதறியுள்ளார். 

சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் குழந்தைகளை மீட்டு மணப்பாறையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.