அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகன்: குவியும் பாராட்டு!?

 

அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகன்: குவியும் பாராட்டு!?

கேரளாவில் உள்ள பள்ளிமோனை சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இவர் 10 ஆம் வகுப்பு  படிக்கும் போதே இவரது தாயும் தந்தையும் பிரிந்துள்ளனர்.

கேரளா: இளைஞர் ஒருவர் தனது அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

gokul

கேரளாவில் உள்ள பள்ளிமோனை சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இவர் 10 ஆம் வகுப்பு  படிக்கும் போதே இவரது தாயும் தந்தையும் பிரிந்துள்ளனர். தாயிடம் வளர்ந்து வந்த கோகுல் தனக்காக அம்மா பட்ட கஷ்டங்களைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்த்துள்ளார். ஒருநாள்  தாய் – தந்தைக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நெற்றியில் ரத்தம் சொட்ட நின்ற அவரது அம்மா, ‘இதெல்லாம் உனக்காகத்தான்பா’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார். ஒருகட்டத்தில் மகனுக்காகத் தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியையும் வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார். இதையெல்லாம் பார்த்து வளர்ந்த கோகுலுக்கு அம்மாவுக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. 

அதன்படி, தற்போது 23 வயதாகும் கோகுல்  தன் அம்மாவுடன் படித்த ஒருவரையே தனது அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்து  கோகுல் ஸ்ரீதர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.