அம்மாவானார் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யா மானசா! 

 

அம்மாவானார் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யா மானசா! 

‘குளிர் 100 டிகிரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ – ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி.

‘குளிர் 100 டிகிரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ – ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி. அதில் நடித்து வந்த சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி திருமணம் செய்துகொண்டு ரியல் லைஃப்பிலும் ஜோடிகளாகியினர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்துகொண்டனர். 

alya manasa

அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சீவ், ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை அழைத்து ஆரவாரமாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். விரைவிலே இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியை ஆல்யா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.