“அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே” : கமல் ஹாசன் பதிவு!
அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே”என்று பதிவிட்டுள்ளார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஊரடங்கால் பொதுமக்கள் ஒன்றுகூடி சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு சார்பாக மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ,இனத்தாலோ, மொழியாலோ,தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது.
அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே”என்று பதிவிட்டுள்ளார்.