அம்பானியுடன் கூட்டு சேரும் சிவகார்த்திகேயன்?

 

அம்பானியுடன் கூட்டு சேரும் சிவகார்த்திகேயன்?

இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது திறமையினாலும், சொந்த முயற்சியினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘கனா’ படத்தை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

sivakarthikeyan

இந்நிலையில், இந்தியாவின் நம்பர்.1 கோடீஸ்வரரான அம்பானியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த முகேஷ் அம்பானியின் தயாரிப்பு நிறுவனம் தற்போது தமிழ் திரையுலகில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijaysethupathi

தமிழில் ரஜினிகாந்த், விஜய்க்கு அடுத்தபடியாக வசூல் நாயகனாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பதை அறிந்து அவருடன் கூட்டு சேர அம்பானியின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றுள்ள ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்க அந்நிறுவன திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.