அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

 

அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜ், நாடியா முராத் ஆகிய இருவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜ், நாடியா முராத் ஆகிய இருவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காங்கோவை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜ், ஈராக்கை சேர்ந்த நாடியா முராத் ஆகிய இருவருக்கு 2018-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. போரின் போது நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியதற்காக இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.