அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு: நள்ளிரவில் சம்பவம்!

 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு: நள்ளிரவில் சம்பவம்!

கோவையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் மீது கல் எறிந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் மீது கல் எறிந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு நிரம்பிய அமைச்சராக வலம் வருபவர், தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரின் வீடு, கோவை சுகுணாபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசி தாக்கியுள்ளார். கல் வீசிவிட்டுத் தப்ப முயன்ற அந்த நபரை, அப்பகுதி போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

velumani

அதன்பின், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொணச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் என்பதும், அமைச்சர் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டபோது, அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. சிவதாஸ் கல் எறிந்ததில், வேலுமணி வீட்டின் ஜன்னல் உடைந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.