அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்

 

அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்

சென்னை: அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

 சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உள்ளாட்சி துறை தொடர்பான ஒப்பந்தங்களை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை ஆதாரங்களுடன் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் செய்தி நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.