அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்

 

அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்

அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியோமி ஜெகாங்கிர் ராவ். 45 வயதாகும் நியோமி ராவ், டெட்டராய்ட் நகரில், இந்தியாவை சேர்ந்த ஜெரின் ராவ் – ஜெஹாங்கிர் நரியோஷாங் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். 

neomi rao

பின்னர், அங்கிருக்கும் ஜார்ஜ் மேசன் பல்கலைகழகத்தின் சட்டப்பள்ளியில் அரசியலமைப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் சட்ட பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் நியோமி ராவ். இந்நிலையில், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிபதியாக நியோமி ராவை, கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார்.

neomi rao

இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் நியோமி ராவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதிபர் டிரம்ப், நியோமியின் கணவர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.