அமெரிக்கா இப்போ முதலிடம் – கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தியது

 

அமெரிக்கா இப்போ முதலிடம்  – கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தியது

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடிப்படையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

வாஷிங்டன்: கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடிப்படையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 17 லட்சத்து 80  ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

ttn

இந்நிலையில், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடிப்படையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20577-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு முந்தி முதலிடத்திற்கு அமெரிக்கா சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா நாட்டில் 1800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 532,879 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.