அமெரிக்காவை உருக்குலைத்த சம்பவம்… தூக்கத்தை தொலைத்த அமெரிக்க அதிபர்!

 

அமெரிக்காவை உருக்குலைத்த சம்பவம்… தூக்கத்தை தொலைத்த அமெரிக்க அதிபர்!

சில நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் அது ஏற்படுத்தியிருக்கிற வடு மக்கள் மனதை விட்டு அகலவே அகலாது கறுப்பு தினமாய் காலத்துக்கும் உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்கர்களின் வாழ்வில் நீங்காத நாளாக இன்றைய செப்டம்பர் 11ம் தேதியை மாற்றி வைத்து இன்றோடு 18 வருடங்கள் கடந்து போயிருக்கிறது. 

சில நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் அது ஏற்படுத்தியிருக்கிற வடு மக்கள் மனதை விட்டு அகலவே அகலாது கறுப்பு தினமாய் காலத்துக்கும் உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்கர்களின் வாழ்வில் நீங்காத நாளாக இன்றைய செப்டம்பர் 11ம் தேதியை மாற்றி வைத்து இன்றோடு 18 வருடங்கள் கடந்து போயிருக்கிறது. 

america

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகவும் புகழ் பெற்ற கட்டிடம் இரட்டைக் கோபுரங்கள். உலக வர்த்தக மையம் இந்த கட்டிடத்தில் இருந்து தான் இயங்கி வந்தது.  இரட்டைக் கோபுரங்கள் அல் குவைதா பயங்கரவாத அமைப்பினால் தகர்க்கப்பட்டதன் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பயணிகள் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள், இரட்டைக் கோபுரங்கள் மீது மோதி, அந்த கட்டிடத்தை முழுமையாக இடிந்து தரைமட்டமாக்கினார்கள். இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அமெரிக்காவை மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகையுமே உலுக்கி எடுத்த சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

america

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாட்டிக் கொள்ளாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் You Are Not Alone: Michael: Through a Brother’s Eyes என்றொரு சுயசரிதை நூலில் இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.  அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அப்போது அமெரிக்காவை அல் கய்தா பயங்கரவாதிகள் எச்சரித்தனர்