அமெரிக்காவுக்கு மட்டும் தான் மருந்து… கொரோனாவுக்கு எதிராக ஜெர்மன் நிறுவனத்துக்கு கொட்டிக்கொடுத்த டிரம்ப்!

 

அமெரிக்காவுக்கு மட்டும் தான் மருந்து… கொரோனாவுக்கு எதிராக ஜெர்மன் நிறுவனத்துக்கு கொட்டிக்கொடுத்த டிரம்ப்!

உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் ஐரோப்பா, அமெரிக்கா முழுக்க பரவிவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க ஜெர்மன் நிறுவனம் ஒன்றுக்கு பல கோடி டாலர்களை டிரம்ப் வாரி வழங்கிவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், கொரோனா வைரஸ்க்கு எதிராக அமெரிக்கா மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் இன்று பரிசோதனை தொடங்குகிறது என்றும் செய்திகள் பரவி வருகின்றன. 
உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் ஐரோப்பா, அமெரிக்கா முழுக்க பரவிவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்கு உலக அளவில் பல கோடி டாலர்கள் உதவிகள் குவிந்துகொண்டே இருக்கிறது.

corona virus

ஜெர்மனியைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகப் பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் மருந்து கண்டுபிடித்தால் அமெரிக்காவுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் உதவி செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றும், அதன் பரிசோதனை இன்று தொடங்குகிறது என்றும் பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். வைரஸ் கிருமிகளுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதும், தடுப்ப மருந்து கண்டுபிடிப்பதும் மிகவும் அரிதான ஒன்று… ஒரு சில வைரஸ் கிருமிகளுக்கு எதிராகத்தான் தடுப்பு மருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.