அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 830 பேர் கொரோனா நோயால் சாவு

 

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 830 பேர் கொரோனா நோயால் சாவு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 830 பேராக உள்ளது.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 830 பேராக உள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 42 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

ttn

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81,795-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 13 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 830 பேர் இறந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக கொரோனா காரணமாக தினமும் 1000 முதல் 2500 பேருக்கு மேல் வரை அமெரிக்காவில் பலியாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.