அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது! – 9 பேர் பலி

 

அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது! – 9 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட ஒன்பது பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள தெற்கு டகோடாவில் சனிக்கிழமை 12 பயணிகள், விமான பணியாளர்களுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டது.

அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட ஒன்பது பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள தெற்கு டகோடாவில் சனிக்கிழமை 12 பயணிகள், விமான பணியாளர்களுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டது.

plane

புறப்பட்ட சில நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக விமானம் பாதிப்புக்குள்ளானது. இதில் விமானி உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டிரேஷன் என்ற அமெரிக்காவின் விமான போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

plane

இது குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டிரேஷன் அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு டகோடா பகுதியில் பனிப்புயல் ஏற்படலாம் என்றும் சில இன்ச் அளவுக்கு பனிப் பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்திருந்தது. எதிர்பாராத விதமாக விமானம் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு விபத்தை சந்தித்துள்ளது. விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.