அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

 

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மிட்லேண்ட் நகரில் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர் அப்பகுதியிலிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அப்பகுதியிலிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

Shoot

அவரை துரத்திச்சென்ற காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினர் மீது அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார். பலமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.