அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4298-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரம் கடந்துள்ளது.

ttn

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று மேலும் 6 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் உயிரிழப்பு 32-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 36 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.