அமித் ஷா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டு தர்மஅடி வாங்கிய இளைஞர்……..

 

அமித் ஷா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டு தர்மஅடி வாங்கிய இளைஞர்……..

டெல்லியில் நேற்று அமித் ஷாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷமிட்ட இளைஞரை அங்கிருந்தவர்கள் சராமரியாக தாக்கினர்.

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாபர்புர் பகுதியில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார்.

பிரச்சார கூட்டத்தின் ஒரு பகுதி

அமித் ஷா பேசி கொண்டிருந்த போது, அந்த கூட்டத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டு இருந்த சில இளைஞர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அவர்களை கோபமாக பார்ப்பதை அறிந்த இளைஞர்கள் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இருப்பினும் ஒரு இளைஞர் கூட்டத்தினரிடம் சிக்கி கொண்டார். அவரை கூட்டத்தினர் சராமரியாக தாக்கினர்.

அமித் ஷா

இதனை பார்த்த அமித் ஷா தனது பாதுகாவலர்களிடம்  இளைஞரை பத்திரமாக உடனடியாக மீட்கும்படி கூறினார். இதனையடுத்து பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்திய கும்பலிடமிருந்து அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.