அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்டி அதிரடி… எடப்பாடியாரிடம் மொத்தமாக சரண்டரான ஓ.பி.எஸ்..!

 

அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்டி அதிரடி… எடப்பாடியாரிடம் மொத்தமாக சரண்டரான ஓ.பி.எஸ்..!

அமித் ஷாவின் ஆசிர்வாதம் ஓ.பி.எஸ்-க்கு இருக்கிறது என எதிர்பார்த்திருந்த நிலையில் உள்ளூரில் கட்சியை தன் கைக்குள் போட்டு அமித் ஷாவுக்கே ஆப்பு வைத்து விட்டார் எடப்பாடி

அதிமுக  பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் ஏறக்குறைய கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

OPS

சீனியர் அமைச்சர்களே வாய் பொத்தி கிடக்கிறார்கள். துறை அமைச்சராக இருப்பதை விட எடப்பாடி பழனிசாமி கொடுக்கிற சலுகைகள் பெரிது. அதனால் வயதான  காலத்தில் நாலு காசு பார்த்தோமா? பதவியில் இருந்தோமா என இருந்துட்டு போய் விடலாம் என சீனியர் அமைச்சர்கள் தங்களது அடிப்பொடிகளிடம் முணுமுணுக்கிறார்கள்.

 ops

உள்ளாட்சி தேர்தல் வந்தால் சீட் வாங்கி தருகிறேன். பொதுக்குழுவில் எடப்பாடிக்கு ஆதரவு கொடுங்கள் என சீனியர்களே வாய் திறந்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் சொல்லும் அளவுக்கு எடப்பாடியாரின் கை ஓங்கி வருகிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் எரிமலை போல அமைதியாக இருந்து வருகிறார். எப்போது வெடிக்கும் என்பது யாருக்கு தெரியும்? என எதிர் பார்த்திருந்த நிலையில் ஒரே அடியாக எடப்பாடியிடம் சரண்டராகி இருக்கிறார் ஓ.பி.எஸ்.ops

எனக்கும், முதல்வருக்கும் சுமுகமான போக்கு உள்ளது. நீங்கள் தான் பிரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எனக்கும் முதல்வருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வுடன் சுமுகமான போக்கு உள்ளது. நீங்கள் தான் பிரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது’’ எனக் கூறி மொத்தமாக சரண்டராகி விட்டார். அமித் ஷாவின் ஆசிர்வாதம் ஓ.பி.எஸ்-க்கு இருக்கிறது என எதிர்பார்த்திருந்த நிலையில் உள்ளூரில் கட்சியை தன் கைக்குள் போட்டு அமித் ஷாவுக்கே ஆப்பு வைத்து விட்டார் எடப்பாடி என்கிறார்கள்.